வல்லம் தமிழ்
Wednesday, May 30, 2012
இரண்டாம் கருவறையே...
இன்னுமொரு தாய்ப்பாலே...
இருட்டுத் திரை கிழிக்கும்
வெளிச்சக் கூர் வாளே...!
பிஞ்சு மழலைகளை
பிரபஞ்ச நெம்புகோல்களாக்கும்
அறிவுத் தொழிலகமே!
உன் வகுப்பறை
காற்றில் கனவுகள் மிதக்கும்
கனவுகள் கிளற பல
கவிதைகள் கிடைக்கும்...
ஆசிரிய உளி செதுக்கிய
அரும்பு சிலைகளின்
அணிவகுப்பே...!
கிளைகள் பூப்பூத்து
வசந்தத்தை வரவேற்க
வேராய் தவமிருந்து
வெற்றிகண்ட வித்தகமே!
அனுபவச் சருகுகள் மூட்டி
அறிவெனும் நெருப்பு சமைப்பாய்
வாழி நீ
வையமுள்ள வரை
உன் ஒளித்தூறலினால்
அகிலமே நனையட்டும்... ஆனந்த மழையில்...
தெருமுனை நடை பாதை
ஊர்மந்தை உலகமெங்கும்
ஆலயங்கள் கட்டிவைத்து
ஆண்டவனை தேடுவோரே...
வாரீர்...!
இங்கே
அன்பே திரித்துணியாய்
அர்ப்பணிப்பே நெய்த்துளியாய
கருணை கசிந்து மிக உருகி- எரியும்
ஞான விளக்கொளியில்
பாரீர்!
பரிசுத்தத்தை ! சக்தியின் தீச்சுடரை...!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)