- நிலவெரியும் இரவு
- நேர்மேலே நட்சத்திரம்
- உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
- கனவெழுதி கரைந்து போகும்
- கன்னங்கள் கோடாகும்
- நினைவிருக்கா உனக்கும் கூட..
- உன் இமைபிரியும் சத்தம் கூட
- எழுப்பிவிடும் என்னை-என்
- உயிர் பிரியும் வலி கூடவா
- உணரவில்லை உனக்கு..?
Tuesday, February 15, 2011
வலி....
Thursday, February 3, 2011
குழந்தைகள்
விடிகாலை! இளம் குருத்து!
முதல் தூறல்! புது நாத்து !
வீரிய விதை ! கீறிய நிலம் !
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஓவியம் !
ஒளிர் கதிர் ! வளர் நிலவு !
இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜங்கள்..!
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம்...!
அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம்..!
பசியில் கிடைக்கும் பல்சுவை விருந்து
பசியால் விளைந்த பசி நீக்கும் மருந்து...!
இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழ்ந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்....
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது...
ஏனெனில்
கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?
Subscribe to:
Posts (Atom)