வல்லம் தமிழ்
Tuesday, February 21, 2012
காந்தி ஜெயந்தி
அன்று மட்டுமாவது
உன் கண்களை மூடி வையடி,
மதுக்கடைகளை திறந்தால் அன்று
மன்னிப்பே கிடையாதாம்...
Tuesday, February 14, 2012
அடிப்போடி...
ஒவ்வொரு நாளும்
நீ கையசைத்து விடைகொடுக்கும்
நிமிடத்திற்கு
முந்தைய நிமிடத்தில்
முடிந்து போகிறது
அன்றைய தினம்!
மழைக் கோலம்
`வருத்தப்பட்டாயாமே...!
நேற்று நீ வரைந்த கோலம்
மழையால் அழிந்ததென்று...
பைத்தியக்காரி..
உன் விரல் செய்த விந்தையை
மனிதர்கள் பார்க்கும் முன்பு
மழை பார்க்க வந்திருக்கும்...
பெருமைப் பட்டுக்கொள்வாயா...`
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)