Tuesday, July 21, 2009

புறக்கணிப்பு

வேண்டாம் என ஒதுங்கி போவதில் ஒரு இயலாமையின் சோகம் இழையோடுகிறது !பல ஆண்டு காலம் தொடர்ந்த தோல்விக்கு பின் கூட கலைஞர் துடிப்புடன் சவால்களை எதிர் கொண்டார் !அதுவே அவரது தற்போதைய வெற்றிகளுக்கு மூல காரணம் .மேடமும் கொஞ்சம் யோசித்து இந்த முடிவை மாற்றிக் கொள்வது அவருக்கும் தமிழகத்துக்கும் நல்லது .
எல்லா தேர்தலும் ஏதாவது ஒரு ஏமாற்று வேலையில் தான் வெற்றியை தந்திருக்கிறது !
அம்மாதிரி ஒரு மாற்று ஏமாற்று வேலையை கண்டறிவது மட்டும் தான் இப்போது அம்மாவுக்கு முக்கிய கடமை .புறக்கணிப்பு அல்ல .

Tuesday, July 7, 2009

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !-2

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் அளித்தவளே !

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!

எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறையருள் ஒளிச்சுடர்

நில்லாதுன்முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!













Thursday, July 2, 2009

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்

கனவும் கனவில் கனவாய் போகும்

தேடலை தேட தேடலே வாழ்வாய்

முடியும் முடியா பாதையாய் முடியும்

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்