Tuesday, July 15, 2014

 

 

மீசை முளைத்த கிளி

பெரியகோயிலுக்கு போகும் பாதை
பெரிய மீசையுடன் அந்த கிழவர்...
திறந்து தின்னக்கொடுத்தால்
முழுநெல்மணியொன்றை கொறித்து
ஏதாவதொரு சீட்டைஎடுத்து
எறிந்து உள்செல்லும் மெலிந்த கிளி...
முரண்டு பிடிப்பதாய் தோன்றும் போதெல்லாம்
கிழவர் பெரியமீசையை நீவிவிடுகிறார்...
கிளி வெட்டப்பட்ட சிறகை ஒடுக்கியபடி
பின்னால் நடந்தே கூண்டிற்குள் செல்கிறது
பொழுதுபோகாமல் கிளியை உற்றுநோக்கி
பெரியமீசையை நீவிவிடும் போதும்கூட
அது அச்சத்தில் நடுநடுங்கி 
சிறிது எச்சம் கூட விடுகிறது...
வாகனநெரிசல் மிகுந்த பொழுதொன்றில்
காக்கிஉடுப்பணிந்த 
மீசை அரும்பிவரும் இளம்பையனொருவன்
லத்தியுடன் நெருங்கி வருகையில்
திடீரென்று...
கூண்டிற்குள் நடுங்கும் கிளிக்கு
பெரிய மீசை முளைக்கிறது.....!


No comments:

Post a Comment