Wednesday, October 27, 2010

வல்லம் தமிழ் சங்க முதல் நிகழ்வு



வல்லம் தமிழ் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கு கொண்ட மாபெரும் பேச்சுப் போட்டி கடந்த 24.10.2010 அன்று வல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்,9 முதல் 10 ஆம் வகுப்பு ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என தனித் தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.நல்லாசிரியர் யோகனாதன் ,ஆசிரியர் தேவசகாயம்,முனைவர் சாந்தி,முனைவர் கவிதாசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுடன் நூலக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்ற சங்கத்தின் நோக்கத்தை நோக்கிய பயணத்தில் முதல் மற்றும் குறீப்பிடத் தக்க வெற்றியாக இது பதிவு செய்யப்படுகிறது.

2 comments: