வலித்துணை
நான் வேறு திசையில் செல்லவேண்டியிருந்திருக்கலாம்...
அல்லது வேறு யாருடனும் பயணத்தை பகிர்ந்து கொள்ள
இயலா மனச்சலிப்பில் இருந்திருக்கலாம்...
நிற்க நேரமற்று அவரைக் கடந்த நிமிடம் தாண்டியும்
வெகுநேரம் என்னுடன் பயணிக்கிறார்
நெடுஞ்சாலையொன்றில்
நல்ல வெயிலில் முகத்தில் வியர்வைவழிய
லிப்ட் கேட்டு கை உயர்த்திய அந்த
நடுத்தர வயதுக்காரர்....!
No comments:
Post a Comment