Monday, July 25, 2016

எனக்குள் ஒருத்தி...

அடியே...
அடிக்கடி தென்படுவாய் முன்பெல்லாம்..
ஆளையே பார்க்க முடிவதில்லையே இப்போது
என்னாச்சு என்றேன்...
அருகில் இருந்தேன்
அடிக்கடி வந்தேன் என்றாள்
விலகிப்போனாயோ இப்போதென்று
வேதனையுடன் வினவினேன்...
ஆமாம்..உன் விழிப்பார்வையிலிருந்து விலகி
மூச்சுக்காற்றுடன் கலந்து
உனக்குள் இருக்கிறேன்-உன்னையே
உற்றுப்பார் என்றாள்
கவிதைக் காதலி!

No comments:

Post a Comment