நண்பர்களே
வணக்கம்
முடிந்து போன பாராளுமன்ற தேர்தலோடு தங்களின் எதிர்காலமும் முடிந்து போய்விட்டதை போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒரு வித அரசியல் சோம்பேறி தனத்தில் ,இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல !
அடுத்த சில ஆண்டுகளில் வரும் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமை தான் இந்த மனசோர்வுக்கு காரணம்.
நம்பிக்கை அற்று போனதற்கு காரணம் இந்த முறை வெள்ளமென பாய்ந்த வெள்ளிபணம்.
இந்த அளவு செலவு செய்தால் தான் இனி வெற்றி பெற முடியும் என்று தீர்மானமாக நம்ம்பி விட்ட எதிர் கட்சிகள்.
ஆனால் ஜனநாயகம் அவ்வளவு எளிதாய் தோற்கும் என நான் நம்பவில்லை !
ஜனநாயகத்தில் எதிர் அணி பலவீனமாக இருப்பது ஜனங்களுக்கு நல்லதல்ல !இன்னும் சொல்லபோனால் அது ஆளும் கட்சிக்கே கூட நல்லதல்ல !
எனவே எதிர் கட்சிகள் தமது பொறுப்பை உணர்ந்து இனியாவது தூக்கம் களைந்து எழுந்து செயல்படலாமே !
No comments:
Post a Comment