Tuesday, February 9, 2010

பசிக்குமா ??

நல்ல வேளை இந்த வலைப்பதிவை நான் மட்டுமாவது நினைவில் வைத்துள்ளேன் . எழுத எவ்வளவோ இருந்தும் எழுத முடிவதில்லை ,வாழ்க்கையை போலவே -தூக்கம் வராத ராத்திரிகள் தொலைந்து போயின -இப்போதெல்லாம் தூங்க முடியாத ராத்திரிகளே தொடர்கின்றன !சோற்றுக்கு அலையும் வேலையால் அழிந்தது சுந்தர பொழுதுகள் !நான் சுகித்திருந்த கவிதை பெண்ணை சம்பள கவர்கள் மறைத்து கொண்டன அல்லது கொன்றன !பிழைத்துக் கொண்டது நானும் என் வயிறும் , பிறிதொரு நாள் வரும் ...அன்றேனும் மனதின் பசியடக்கும் மாயம் நிகழுமா ??

1 comment:

  1. வல்லம் கவிஞரே..! வணக்கம் தங்கள்
    வெல்லத் தமிழை விருந்தாய் உண்டேன்..!
    தங்களைப் பற்றிய தனித்த அறிமுகம்
    உங்களைப் பற்றி உயர்வாய்ச் சொன்னது.!
    இன்னும் எழுதுக;ஏனிதில் தயக்கம்!
    கன்னல் தமிழைக் கசக்கிப் பிழிந்து
    இன்பச் சுவைகள் எல்லார்க்கும் தருக..!
    அன்புக் கவிஞரே..!வாழ்த்தினைப் பெறுக..!
    கவிஞர் கங்கை மணிமாறன்

    ReplyDelete