Saturday, September 5, 2009

முகமழிந்து முள்வேலிக்குள் .....

வணக்கம் நண்பர்களே...ஆயிரம் ஆயிரம் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆந்திர முதல்வர் இறந்தபோது அங்கிருந்த அரசியல்வாதிகள் ஒரே குரலில் அனுதாபமும் அதிர்ச்சியும் வெளியிட்டு அரசியல் தாண்டிய மனித மாண்பினை காட்டியது பாராட்டுக்குரியது .ஆனால் ஒரே இனத்தில் பிறந்து ஒரே மொழியை பேசிக்கொண்டு ,அந்த இனத்தில் பிறந்த ஒரே பாவத்திற்காய் முள்வேலிக்குள் முகமழிந்து, முகவரியற்று வாடுபவனை பற்றி இங்கு ஏன் எந்த பெரிய அரசியல்வாதியும் பேச மறுக்கிறார்கள் ?தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்க வேண்டாம் .ஆனால் தமிழ் இனமே தடை செய்யப்பட்ட இனமா என்ன ?
பேசவே தொடங்காத பச்சை மண் முதல் பேசவே முடியாத பட்ட மரம் வரை ஒரு மொழியின் பெயரால் முள்வேலிசிறைக்குள் சித்ரவதை படுத்த படுவது என்ன நியாயம் ?
உடுக்க மாற்று உடையின்றி ,இருக்க சரியான கூரையின்றி ,கழிவறை வசதி கூட இல்லாமல் அப்பாவி தமிழ் மக்கள் அவலப்படுவது எதற்காக ?
மிருகங்கள் மீது கூட பரிவு காட்டும் உலக சமுதாயம் ஏன் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது ?விலங்குகளை விடவா தமிழன் கேவலமாகி விட்டான் ?

No comments:

Post a Comment