Tuesday, January 11, 2011

மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...

1 comment:

  1. கவிதையின் அடிப்படை கருத்தை இறுதி வரியில் கொடுக்கும் விதம் நன்றாக இருக்கிறது
    வெட்ட வெட்ட வளரும் மரம் போல வளர வேண்டும் நீங்களும் உங்கள் திறமைகளும்
    புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete